அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து, முக்கிய துறையான போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ராஜகண்ணப்பனுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவால், தி.மு.க., மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அரியலுார் மாவட்டம், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வான சிவசங்கர், தி.மு.க., மாவட்ட செயலராகவும் இருக்கிறார். திருச்சி மண்டலத்தில், அமைச்சர் நேருவையும் மீறி, எம்.பி., மத்திய அமைச்சர் என உயர்ந்து, தி.மு.க.,வில் முக்கிய இடத்தை பிடித்தவர் ஆ.ராஜா.பெரம்பலுார் பொது தொகுதியான பின், நீலகிரி எம்.பி.,யானாலும், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களை அடிப்படையாக வைத்துதான் அரசியல் நடத்தி வருகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.