ஐதராபாத்: ஐதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர்.

திரை பிரபலங்கள், அதிகாரிகளின் வாரிசுகள் என பலரிடமும் இப்போது போதை பொருட்களின் புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனும் இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ரேடிசன் புளூ ஐந்து நட்சத்திர ஹோட்டல் பப்பில் நேற்று (ஏப்ரல் 3) அதிகாலையில் நடந்த பார்ட்டியில் கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.

About The Author