Month: January 2022

தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு…

தமிழக அரசு தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக் கொள்கைக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. வலுவான, பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் கொள்கை உருவாக்கம். தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் பாண்டி.

செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்!

பிப் 19-ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு மாற்றம். – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.

புதிய வைரஸ் – பெய்ஜிங்!!!

பெய்ஜிங்: நியோ கோவ் என்ற புதிய வகையான சார்ஸ் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வுஹானை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது மனிதர்கள் இடையே இன்னும் பரவவே இல்லையாம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்று வுஹான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை…

கலந்தாய்வு…….

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இரண்டாவது நாளாக இன்று கலந்தாய்வு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ஜெகதீஸ்வரன்.

தமிழகஅரசு உத்தரவு…

ரேஷன் கடைகள் மூலம் முதல்கட்டமாக சென்னை, கோவையில் சிறு தானியங்கள் விற்பனை- தமிழகஅரசு உத்தரவு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ராஜேந்திரன்.

வடபழனி முருகன் கோயிலில் தரிசனம்!

நீண்ட நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமையான இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வடபழனி முருகன் கோயிலில் காலை முதலே தரிசனம். தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் அலெக்ஸ்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையடுத்து தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி இன்று காலையில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு…

கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு

மாணவர்களின் நலன் கருதி செய்முறை தேர்வுகளுக்காக வருகிற 1-ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுகிறது. கல்லூரிகள் திறந்தாலும் ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும்-அமைச்சர் பொன்முடி பேட்டி. தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் வேல்முருகன்.

சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக பயன்படுத்த ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் அலெக்ஸ்.

பாகிஸ்தான் கடத்தல்காரர்களின் முயற்சி முறியடிப்பு!

பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பி.எஸ்.எப்.வீரர் காயமடைந்தார். 44 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள், 1 சீன துப்பாக்கி ஒரு பெரெட்ட்டா பிஸ்டல், உள்ளிட்டவற்றை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்மலர்…