15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது. அணிகள் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் 5 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 

ஐ.பி.எல். அணிகள் வருகிற 14 அல்லது 15-ந் தேதியில் இருந்து பயிற்சியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 25 சதவீத ரசிகர்களை அனுமதிக்க மராட்டிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

About The Author