திருவள்ளுவர் திருநாள்
வாழ்த்துகள்
உலகப் பாவை
30. தலை நிமிர்ந்து வாழ்
சிந்திட்ட குருதி போதும் ;
சிவந்தவர லாறு போதும்; சொந்தங்கள் கூடச் சூழ்ச்சி
சூதுகளால் மடிதல் போதும்;
வெந்திட்ட புழுக்கள் போல வேதனையால் மாந்தர் நாளும் நொந்துள்ளம் வெம்பி வெம்பித் துயரத்தில் வீழ்தல் போதும்;
வந்திட்டோம் வாழ்ந்தோம்
என்று
வாழ்ந்திட்ட வாழ்க்கை
போதும்;
தந்திட்டோம் மேன்மை என்று தலைநிமிர்ந்து வாழ்வ
தெந்நாள்?
அந்நாளே ஒருமைப் பாடு அரும்புகிற பொன்னாள் என்று வந்தித்துக் கூறி நாளும்
வலம்வருவாய் உலக பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்