தமிழக அரசு எச்சரிக்கை?சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்?

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முழுமையாக குறையவில்லை. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் பணிபுரிகின்றனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை போன்ற பல புகார்கள் வந்துள்ளது. எனவே தமிழக அரசு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து தான் பணிக்கு வரவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

அதோடு தலைமை செயலகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து தான் உள்ளே வர வேண்டும் எனவும், இதனை மீறி முகக்கவசம் அணியாமல் எவரேனும் தலைமை செயலகத்தில் நுழைய முயன்றால் அவர்களை அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எவரேனும் முகக்கவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டால் அவர்கள் மீதும் துறை ரீதியான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்