தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்களை தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமையிலும் , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்களை தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமையிலும் , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.