தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முதல்வர் அறிவிப்பு!

சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களில் ரோந்து குழுக்களை ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

சிறப்பு வாகன சோதனைகள் நடைபெறும். தொடர் விபத்து சாலைகளை கண்டறியும் பணியும் நடைபெறும் என கூறியுள்ளார்.