ஆக.24,25-ல் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: அறநிலையத்துறை அறிவிப்பு

ஆக.24, 25-ல் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளதாக அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ள பங்கேற்போர் பதிவு செய்ய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தியா, வெளிநாடுகளில் இருந்து பங்கேற்போர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவிரும்புவோருக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author