எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி

எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி: மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு

எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.