கனடாவில் ரூ.133 கோடி தங்கக்கட்டிகள்

கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 நபர்கள் கைது.

கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த 6 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 3 நபர்களை தேடிவருகின்றனர். ஏர் கனடாவில் பணிபுரிந்த இருவர் மற்றும் துப்பாக்கி கடத்தல்காரர் என்று கூறப்படும் ஒன்பது பேர் ஒரு வருடத்திற்கு முன்பு டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 24 மில்லியன் டாலர் தங்கம் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக 5,000க்கும் அதிகமான திருட்டுச் சம்பவங்கள் உட்பட 19 குற்றவியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 17, 2023 பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 400 கிலோகிராம் எடையுள்ள 6,600 தங்கக் கட்டிகள் திருடப்பட்டது. அதன் மதிப்பு ரூ.20 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாகவும் காவல்துறைதெரிவித்தது. திருடப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆர்டர் செய்யப்பட்டதாகவும், மேலும் அவை டொராண்டோவிற்கு ஏர் கனடா விமானத்தின் மேலோட்டத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார்.