*தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தல்*

“பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது”

“தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரை செய்ய கூடாது”

“விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்”

“வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்”

“தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்க கூடாது”