எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி கிடக்க வேண்டும். பல்வேறு தொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. எனவே அதில் பயனடைந்து தொழில் முனைவோர் ஆகுங்கள் என ஆளுநரிடம் விருது பெற்ற பின்பு தொழில்முனைவோராக திகழ்ந்த வரும் ரெஜினா பேசினார்.


வாஹின் என்ற பெயரில் 12 பெண்களை வைத்து சுய உதவிக் குழு நடத்தி, அதன் மூலம் தாவரம் மற்றும் இயற்கை அடிப்படையிலான வாழ்வாதாரத்தை உருவாக்கி வருகிறார் தேனி மாவட்டத்தை சேர்ந்த 62 வயதாகும் ரெஜினா. பொதுவாக இந்த வயதில் இளைப்பார வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருந்து வரும் சூழலில், அர்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பெண்களின் சுயமுன்னேற்றத்துக்கு முன் மாதிரியாக இவர் இருந்து வருகிறார்.

60 வகையான சிறுதானிய உணவு பொருள்களை தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறார். பிரதமர் திட்டத்திலும் ரூ. 15 லட்சம் கடனுதவி பெற்று 11 எந்திரங்களை வாங்கி தொழில் செய்து வருகிறார்.

இந்த வருமானமானது அந்த குழுவை சேர்ந்த பெண்களின் வீட்டு செலவுகளுக்கும், குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கும் பயன் தருகின்றன. இவர்களின் கூட்டு முயற்சி கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

About The Author