வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன், பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இதனால் பொது மக்கள் மிகுந்த பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளன. இந்த கடைகளை அகற்றுவது தொடர்பாகவும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

About The Author