செவியலியர் உயிரிழப்பு..

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 மணி நேரத்தில் செவியலியர் உயிரிழப்பு..

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக ஒப்புதல் கிடைத்த பைசர் தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது. போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்கள ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது

போர்ச்சுக்கல் நாட்டில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

K.N. ஆரிப் செய்தியாளர்
தமிழ் மலர் மின்னிதழ்.