ஐஸ்வர்யா பிறந்த நாள்.

இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னி ஐஸ்வர்யாராயின் 49வது பிறந்த தினம் இன்று….!ஐஸ்வர்யா ராய் :பிறப்பு..நவம்பர் 1.1973.இவர் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். ஹிந்தி, தமிழ்,தெலுங்கு, பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்துள்ளார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜனரஞ்சக ஹிந்தி நடிகரான அமித்தாப்பச்சனின் மகனான  அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.பிறப்பு:நவம்பர் 1, 1973 …அகவை 49.மங்களூர்கர்நாடகா. துணைவர்:அபிஷேக் பச்சன்.விருதுகள்:பில்ம்ஃ பெஃயார் விருதுகள்:சிறந்த நடிகை (தமிழ்)1999 ஜீன்ஸ்சிறந்த நடிகை2000 அம் தில் தே சுகே சனம் (ஹிந்தி)2003 தேவ்தாஸ் (ஹிந்தி) ஐஷ்வர்யா கர்நாடகவில் உள்ள மங்களூர்நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார்.ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார் ஐஸ்வர்யாராய். ஐஷ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் ஹிந்தி நடிகர்  நடிகர் சல்மான்கானுடன் “Dating” எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஒஃப் இந்தியா கட்டுரையில் மறுத்துப் பேசியிருந்தார்.2007ஆம் ஆண்டு ராய் ஹிந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்னம்இயக்கத்தில் “இருவர்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார். ஐஷ்வர்யாராய் முன்னாள்  தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடத்தில்  நடித்தார்.சங்கர் இயக்கத்தில் வெளியான “ஜூன்ஸ்”படத்தில் பிரஷாந்த் ஜோடியாக நடித்தார். மீண்டும்மணிரத்தினம் இயக்கிய கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்,ராவணன் படங்களில்நடித்தார். பின் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சங்கர் இயக்கத்தில் “எந்திரன்”படத்தில் நடித்தார்.2022 இல்”பொன்னியின் செல்வன் படத்தில் “நந்தினி”என்ற மிக முக்கியமான வேடத்தில் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்தார்.உலக அழகி விருது வென்ற காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.