தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து மீனவர்கள் 19 பேர் இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்றுடன் மீனவர்களின் சிறைக்காவல் நிறைவடைந்துள்ள நிலையில், 19 மீனவர்களையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். 19 மீனவர்களும் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.