‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை பகிருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு!!

புதுடில்லி: ‛மன் கி பாத்’ நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள் குறித்த யோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி, மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ‛மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதுவரை 87 எபிசோடுகள் ஒலிபரப்பான நிலையில், 88வது எபிசோட் வரும் ஏப்.,24ம் தேதி ஒலிபரப்பாகிறது. ஒவ்வொரு எபிசோடிலும் பிரதமர் மோடி ஏதேனும் கருபொருளை மையமாக வைத்து கருத்துகளை பகிர்ந்து வரும் பிரதமர் மோடி, அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள் குறித்த யோசனைகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.