‘மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்’!!

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக்கோரியும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.