இலங்கையில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி; மசோதா நிறைவேற்றம்!!

கொழும்பு: இலங்கையில் பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பார்லிமென்ட் முன்பாகவும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்கும் விதமாக கூடுதல் வரி விதிக்கும் மசோதா இன்று (ஏப்.,7) பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.