தமிழகத்தில் கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்யும் பணிகள் தீவிரமடைந்து உள்ளதால், புதுச்சேரி எல்லைகளில் கஞ்சா விற்பனை கும்பல்கள் தஞ்சமடைந்து வருகின்றன. இரு மாநில போலீசார் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கஞ்சா கும்பலை பிடிக்க முடியும்.
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க, ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை, தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் துவக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.