மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா!!

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டேனியலி காலின்சை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். 

அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற அரைஇறுதி சுற்றில் ஒசாகா, ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) சந்தித்தார். இதில் முதல் செட்டில் பெலின்டா (6-4) முன்னிலை வகித்தார். இதையடுத்து 2-வது மற்றும் 3-வது செட்களில் நவோமி ஒசாகா (6-3), (6-4) முன்னிலை பெற்று 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக நவோமி ஒசாகா முன்னேறியுள்ளார். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.