2 டப்பா, ஆடு, மாடு தான் உள்ளது” – நான் 600 கோடிக்கெல்லாம் வொர்த் இல்லைப்பா: ‘பம்மி ‘ வெடிக்கிறார் அண்ணாமலை!

சென்னை: சென்னை: ‛அடுத்த 6 மணி நேரம் பா.ஜ., அலுவலகத்தில்தான் இருப்பேன், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். தொட்டம்பட்டியில் இருந்து வந்த என்னை, திராணி இருந்தால் தொட்டு பார்க்கட்டும்’ என திமுக.,வுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமீபகாலமாக திமுக அரசு, பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக மின்சார ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இதனை எதிர்த்து பி.ஜி.ஆர் நிறுவனம் அண்ணாமலை மீது 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் தொடர்பாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளா் ஊ்.எஸ்.பாரதி, அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.