இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 1,270 ஆக குறைவு!

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,20,723 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,567 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,83,829 ஆனது. தற்போது 15,859 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.