டில்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா: லோக்சபாவில் இன்று தாக்கல்!!

புதுடில்லி:தலைநகர் டில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டதிருத்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
டில்லியில், கடந்த 2011ல், டில்லி மாநகராட்சி, தெற்கு டில்லி, வடக்கு டில்லி, கிழக்கு டில்லி என மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. ஆனால், மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை, நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.