தொழில் துறையினருக்கு பட்ஜெட்டால் பலன் இல்லை: பா.ஜ., வானதி கருத்து!!

கோவை: ”தொழில் துறையினருக்கு பலன் தரும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது,” என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கூறியதாவது:கோவையில் ஐந்து கோடி மதிப்பில் கயிறு வணிக நிறுவனம் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் கயறு வாரிய அலுவலகம் செயல்படுகிறது. அதனால் புதிய திட்டங்களை கொண்டு வருவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.