கல் குவாரிக்கு ரூ. 9.36 கோடி இழப்பீடு கலெக்டருக்கு தீர்ப்பாயம் உத்தரவு…

சென்னை:திருப்பூரில், விதிகளை மீறிய கல் குவாரி, 9.36 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது தொடர்பாக, விரைந்து முடிவெடுக்குமாறு, கலெக்டருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சேதுராம் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, சேனாபதிபாளையம் கிராமத்தில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி, சட்ட விரோதமாக, விவசாய நிலத்தில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.