வேலைக்காரப் பெண்ணின் கொடூரச் செயல் !!!!

திருடுவதற்கு வசதியாக மூதாட்டியின் கண்ணில் ஜண்டுபாம், ஹார்பிக் போன்றவற்றை சொட்டு மருந்தாக விட்டுள்ளார் அந்த வேலைக்காரப் பெண். ஹேமாவதி என்ற 73 வயதான மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். அவரது ஒரே மகன் லண்டனில் இருக்கிறார். அவர் தனது தாயை உடன் இருந்து கவனித்துக் கொள்ள பார்கவி என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ஹேமாவதியின் கண்கள் சிவந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு ஹேமாவதியின் மகன் கூறியுள்ளார். அங்குச் சென்றும் பயனில்லை. அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கண்களில் ஏதோ ஒவ்வாத ரசாயனங்கள் விடப்பட்டிருப்பதை கண்டறிந்து தெரிவித்தனர். இதையடுத்தே குடும்பத்தினருக்கு பார்கவி மீது சந்தேகம் வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை செய்ததில், பார்கவி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.