யுவராஜ்சிங் எழுதிய உருக்கமான கடிதத்துக்கு விராட் கோலி பதில்

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் வீரரான யுவராஜ்சிங் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலிக்கு கடிதத்துடன் பரிசு ஒன்றையும் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில், ‘மிகப்பெரிய கேப்டனாகவும், தலைவனாகவும் இருக்கிறாய். தற்போது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை நீங்கள் தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. இனி உங்களிடம் இருந்து வழக்கமான ரன் சேசை எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்காக மிகவும் தாராளமாகவும், அக்கறையுடனும் இருப்பீர்கள் என யுவராஜ் சிங் கடிதத்துக்கு விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.