போலியோ சொட்டு மருந்து – வரும் ஞாயிறு சிறப்பு முகாம்..

நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி