காட்டு யானையிடம் இருந்து கிராம மக்களை காப்பாற்றிய வனக்காவலர் !!!

ஒடிசா மாநிலத்தின் ரெதாகோல் வனப் பிரிவுக்குட்பட்ட சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சட்சாடி மற்றும் அங்கபிரா கிராமங்களுக்குள் கடந்த செவ்வாய்கிழமை அன்று  ஒற்றை யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அப்பகுதியில் உள்ள பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியது. வனக் காவலர் ஒருவர் சீறிப் பாய்ந்து வந்த ஒற்றை யானையை தீ பந்தத்தை வைத்து விரட்டி மக்களுக்கு பாதுகாப்பு அளித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.