சிறையில் சந்தித்த அரசு டாக்டர் பணியிடை நீக்கம்!!!

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய மாணவர்களை சிறையில் சந்தித்த அரசு டாக்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினரை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். அவர்களை சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு டாக்டர் சுப்பையா, சிறைக்கு சென்று சந்தித்துள்ளார். இது அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் எனப் புகார் எழுந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.