உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெண் அவரிடம் வந்து, ‘கூட்டுறவு நகை கடன் ஏன் தரலை?’ என்று உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த திமுகவினர் அந்த பெண்மணியினை மிரட்டி வாய் மூட கூறினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.