கழிவு நீர் தேங்கி பொது மக்கள் செல்ல இடையூறாக உள்ளது

இந்த இடம், நெருப்பெரிச்சல் தோட்டத்து பாளையம் இடையில் உள்ள இடம், இந்த இடத்தில் கழிவு நீர் தேங்கி பொது மக்கள் செல்ல இடையூறாக உள்ளது, இந்த இடத்தில் இருந்து 10-20அடி தூரத்தில் புதிய பாலம் கட்டினார்கள், ஆனால் அந்த பாலம் இப்போது உபயோக படுத்த முடியாது, ஏன் என்றால் அந்த பாலம் வழியாக இந்த கழிவு நீர் செல்வது இல்லை, இந்த புதிய பாலம் கட்டியதே இந்த கழிவு நீர் செல்வதற்கு, ஆனால் இந்த பாலத்தின் வழியாக இந்த கழிவு நீர் செல்ல முடியாது, கழிவு நீர் தேக்கம் இருப்பது பள்ளமான பகுதி, இந்த கழிவு நீர் தேக்கம் பொது மக்கள் செல்ல இடையூறாக இருக்கிறது, மற்றும் பொது மக்கள் நடந்து செல்ல முடியாது, இந்த கழிவு நீரில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை. எனவே இந்த கழிவு நீர் செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

N சுதாகர் CHIEF NEWS. எடிட்டர் திருப்பூர் A மருதமுத்து NEWS எடிட்டர் திருப்பூர்