பெய்ஜிங்: நியோ கோவ் என்ற புதிய வகையான சார்ஸ் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வுஹானை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது மனிதர்கள் இடையே இன்னும் பரவவே இல்லையாம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்று வுஹான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பறவைகளிடம் பரவினாலும் இதில் உருமாற்றம் ஏற்பட்டால் மனிதர்களிடம் பரவும். ஆனால் சிக்கல் என்னவென்றால் இதில் ஒரே ஒரு சின்ன உருமாற்றம் அடைந்தால் போதும். அது மனிதர்களிடம் தீயாய் பரவுமாம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுதாகர்.

About The Author