காவல்துறை கண்காணிப்பில் சங்குதீர்த்த குளம்…

திருக்கழுக்குன்றம் புகழ்பெற்ற #சங்குதீர்த்த குளத்தில் கடந்த 05.11.2021 மற்றும் 06.11.2021 அன்று ஈரோடு உழவாரப்பணியினர் குளத்தினை தூய்மைபடுத்தினர். #சங்குதீர்த்த குளத்தில் அதன் புனித தன்மையை கெடுக்கும் வகையில் சிலர் துணிதுவைப்பது,மீன் பிடிப்பது,மதுஅருந்துவது போன்ற பாவச்செயல்களை செய்துவருகின்றனர். சங்குதீர்த்த குளத்தினை பாதுகாக்கவேண்டி திருக்கோயில் நிர்வாகம் சார்பாகவும்.பொதுமக்கள் சார்பாகவும் காவல் துறை வசம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படிடையில் காவல்துறை #சங்குதீர்த்த குளத்தினை தங்கள் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டனர்.இனி சங்குதீர்த்த குளத்தில் அதன்புனிததன்மையை கெடுக்கும் வகையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.இன்று(09.11.2021) காவலர் சங்குதீர்த்த குளத்தினை கண்காணித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன்

About The Author