மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கினங்க, மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு,கோவிட்-19 மூன்றாம் அலை தொற்று பரவாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மருந்து அமுக்னா சூரணம் மாத்திரையை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று (03.02.2021) அயப்பாக்கம் ஊராட்சியில், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், மக்கள் சேவகர், அன்பிற்கினிய அண்ணன் மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் ஆழ்துளை கிணறு பணியினை தொடங்கி வைத்த போது. வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளர், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அ.மா.துரைவீரமணி, ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊராட்சி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.