அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரிக்கை

அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிவகங்கை வட்டக்கிளை தலைவர் ராமசாமி கூறியதாவது.,

தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்திருந்து இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வினை, மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மாநில அரசு அறிவிக்கும். அகவிலைப்படி என்பது விலை வாசி உயர்வு சதவீதத்திற்கேற்ப விலை குறியீட்டு எண்ணை கணக்கிட்டு வழங்குவதாகும். கொரோனா பரவல் காரணமாக ஏற்படும் இழப்பீடுகளை சரி கட்ட மத்திய அரசு கடந்த ஜனவரி முதல் ஜூன் 2021 வரை 18 மாத காலத்திற்கு அகவிலைப்படி உயர்வை தள்ளி வைத்தது.