SBI பிளாட்டினம் டெபாஸிட் திட்டத்தில் கூடுதல் வட்டி

SBI அறிமுகப்படுத்தும் புதிய எஸ்பிஐ பிளாட்டினம் வைப்புத் திட்டத்தில், ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14, 2021 வரை சேரலாம்.

செய்தியை எஸ்பிஐ ட்விட்டரில் அறிவித்தது, தனது ட்வீட் செய்தியில், “இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், பிளாட்டினம் திட்ட முதலீட்டில் முதலீடு செய்து, சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டிய நேரம் இது. எஸ்பிஐ  அறிமுகப்பட்டுத்தும் இந்த சிறந்த டெர்ம் டெபாஸிட் 14 செப்டம்பர் 2021 வரை இணைந்து சலுகைகளை பெற்று பயனடையலாம்.” எனக் கூறியுள்ளது.

SBI அறிமுகப்படுத்தும் புதிய எஸ்பிஐ பிளாட்டினம் வைப்புத் திட்டத்தில், ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14, 2021 வரை சேரலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க  பல ஆப்ஷன்களும் உள்ளது.