முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு 200/-அபராதம்

இருசக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு 200/-அபராதம்
E-2 ராயப்பேட்டை காவல்துறை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலையின் தாக்கம் பரவி வருவதால் தமிழக முதலமைச்சர் திரு/
மு. க. ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகத்தில் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் மேலும் தளர்வுகள் உடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுமென்று காவல்துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராயப்பேட்டை E-2 காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு/ பிரேம் ஆனந்த் ஆலோசனையில் ராயப்பேட்டை E-2 காவல் உதவி ஆய்வாளர் திரு/ சுந்தர் சிங் தலைமையில் ராயப்பேட்டை
E-2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாக்டர் நடேசன் ரோடு கிருஷ்ணாம்பேட்டை மார்கெட் அருகில் E-2 ராயப்பேட்டை மகளிர் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு முக கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு
ரூ, 200/- அபராதம் விதித்தனர்.

செய்தி: S.MD. ரவூப்