சோழிங்கநல்லூர் தொகுதி காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக மகுடீஸ்வரி பொறுப்பேற்றுள்ளார்..

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில் எஸ்16 காவல் நிலையம் அமைந்துள்ளது. இக்காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக திருமதி.மகுடீஸ்வரி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பத்திரிகையாளர்கள் சார்பில் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.