திருவாரூரில் மஜக ஆர்ப்பாட்டம்..

திருவாரூரில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில், காவிரியாற்றில் மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும், கர்நாடக அரசையும், அதற்கு துணை போகும் ஒன்றிய அரசையும் கண்டித்து மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

கண்டன முழக்கங்களை மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, பொதக்குடி கிளை செயலாளர் முனவர் உசேன், கூத்தாநல்லூர் நகர இளைஞர் அணி செயலாளர் ஷேக் ஆகியோர் முழக்கங்களை எழுப்பினர்.

காவிரி எங்கள் ரத்த ஓட்டம்!
அதை தடுத்து நிறுத்த விடமாட்டோம்! காவிரி எங்கள் வாழ்வுரிமை,
அது தென்னகத்தின் பொதுவுடைமை என்பது போன்ற முழக்கங்கள் அதிர்ந்தன.

திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்ட முழக்கங்களை நின்று கவனித்து சென்றனர்.
மாலை 5 மணி அளவில், போக்குவரத்து நிறைந்த தைலம்மை தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்ததால், அந்த பகுதி பரபரப்பாக கவனிக்கப்பட்டது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி, நிர்வாகிகள் திருவாரூர் சித்திக், அத்திக்கடை குத்புதீன், அடியற்கை லியாகத் அலி மற்றும் மஜக ஒன்றிய, கிளை நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்