காஞ்சீபுரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது..

காஞ்சீபுரம் திருக்காலிமேட்டை சேர்ந்தவர் அன்பழகன். ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் காஞ்சீபுரம் ரெயில்வே ரோடு ஆட்டோ நிறுத்துமிடத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கொலை, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட திருக்காலிமேடு, ஏரிக்கரை தெரு, அன்னை சத்யா நகரை சேர்ந்த மணி என்ற கற்பக மணி (வயது 40) ஆட்டோ டிரைவர் அன்பழகனை தரக்குறைவாக பேசி கையால் அடித்துள்ளார். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்களின் கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்து விஷ்ணு காஞ்சீ போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜிக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்று, தப்பிச்சென்ற மணியை கைது செய்தார்.
அ.காஜா மொய்தீன் (நிருபர்)