மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
July 13, 2021
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

எங்கே எனது தடுப்பூசி என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் போல்டன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம் முன்பு காலை 11 மணி அளவில் AIYF மாவட்ட செயலாளர் தோழர் P.சந்தனசேகர் தலைமையில் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசே தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான 14 கோடி தடுப்பூசிகளை உடனடியாக வழங்கிடு, தடுப்பூசி உற்பத்தியை பொதுத்துறை நிறுவனங்களில் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்கிடு, உற்பத்தி செய்யும் தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கி அவர்கள் பொதுமக்களிடம் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்து, காலதாமதமின்றி செங்கல்பட்டு HLL தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடு, போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜாசிங் ,செண்பகமல் ராஜா, காளீஸ்வரன் , பலவேசம் , சக்தி, சூர்யா , தீலீபன் ,குமார், பிரபா ,அர்ஜுன் .உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் செல்வராஜ் – தூத்துக்குடி