330க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழப்பு..

மார்ச் 23ஆம் தேதி முதல் சிஆர்பிஎஃப்பில் 9,230 கொரோனா பாதிப்புகளும், 44 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. பிஎஸ்எஃப்பில் 8,250 பாதிப்புகளும், 41 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப்பில் 8,163 பாதிப்புகளும் 31 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. எஸ்எஸ்பியில் 3,569 கொரோனா பாதிப்புகளும் 6 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. ஐடிபிபி யில் 1,151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். என்டிஆர்எஃப்பில் 187 பாதிப்புகளும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. என்எஸ்ஜியில் 152 கொரோனா பாதிப்புகளும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

ஜூலை 6 வரை, மொத்தம் 82,858 சிஏபிஎஃப் வீரர்கள் தொற்று பாதித்து குணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.