அண்ணா சாலை காவல் உதவி ஆணையாளர் திரு/ சேகர் D-2 அண்ணா சாலை போக்குவரத்து காவல் விழிப்புணர்வு

தமிழக அரசு கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் மேலும் ஒரு வாரத்திற்கு ஜூன் – 14 ஆம் தேதியிலிருந்து ஜூன் – 21ஆம் தேதி 6 மணி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழக காவல்துறை டிஜிபி திரு/ திரிபாதி இ.கா.ப, ஆலோசனையில்
தமிழக காவல்துறை ஆணையாளர்
திரு/ சங்கர் ஜிவால் ( comisner of police ) அவர்களின் அறிவுரையில்

அண்ணாசாலை D-2 காவல் உதவி ஆணையாளர் திரு/ சேகர் அவர்கள் தலைமையில்,

D- 2 அண்ணா சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு/ ராமதுரை

போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் திரு/ ரஷீத் ,
ஆரோக்கிய நாதன்
மற்றும் போக்குவரத்து தலைமை காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகனத்தில் வருவோர் தலைக்கவசம், முக கவசம் தகுந்த இ- பதிவு,
செய்யப்படாத வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும்கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தன்மை பற்றி காவல் உதவி ஆணையாளர் திரு/ சேகர் அவர்கள் முன்னிலையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் திரு/ ரஷீத் மற்றும் திரு/ ஆரோக்கிய நாதன் போக்குவரத்து தலைமைக் காவலர்கள் ஒலிபெருக்கி மூலம்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்