கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு சிகிச்சை முகாம் தொடங்கி வைத்தார் திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA

தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி
தமிழக அரசு
சுகாதாரத்துறை
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது,

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக் கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA,
அவர்கள் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மண்டலம் – 9 கோட்டம்- 119 V.M. தெருவில் உள்ள பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாமை (07/06/21) இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பெற்று அந்த வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA,
அனைவருக்கும், நிவாரண தொகுப்பு அடங்கிய ( bag) அரிசி, பருப்பு, காய்கறிகள், தண்ணீர் பாட்டில் பானங்கள், பிஸ்கட், நல பொருட்களை வழங்கினார்.

இந்த சிறப்பு முகாமில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு
பகுதி செயலாளர் காமராஜ்,
வட்டச் செயலாளர் மோகன் திருவல்லிக்கேணி பகுதி திமுக அவைத்தலைவர் செழியன் மற்றும் திருவல்லிக்கேணி மண்டலம்-9 கோட்டம் – 119 உள்ள சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், குப்ப முத்து, கார்த்திகேயன், மனோஜ் குமார் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்