15 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது S16காவல் நிலையம் தனிப்படை அதிரடி சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி உட்பட்ட பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் உள்ள S16 காவல் நிலையத்திற்கு போதைப் பொருட்கள் (கஞ்சா) விற்கிறார்கள் என்று ரகசிய தகவல் கிடைத்தது இந்நிலையில் S16காவல் நிலையம் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி மகுடீஸ்வரி அவர்கள் தன் தலைமையில் காவலர் மனோகர் நரேஷ் அவர்களை வைத்து தனிப்படை அமைத்தனர் பிறகு 24 மணி நேரத்திற்குள் கஞ்சா விற்றவர்களை. (கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் வயது 37) பிடித்து அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா போதை பொருட்கள் (கஞ்சா) பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்

About The Author