காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளான ஒரகடம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையிலான போலீசார் பல்வேறு தொழிற்சாலைகளில் சோதனை செய்தனர்