தாராபுரம் ஊதியூா் அருகே அமராவதி ஆற்றில் மிதந்து வந்த பூசாரி சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாராபுரம் தாலுகா, ஊதியூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புங்கந்துறை பகுதியைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (53).

கோயில் பூசாரியான இவா், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் இருந்த தெய்வசிகாமணி சனிக்கிழமை மதியம் மாயமாகியுள்ளாா்.

குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஊதியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்நிலையில், புங்கந்துறை செல்லாண்டி அம்மன் கோயில் அருகேயுள்ள அமராவதி ஆற்று தடுப்பணையில் ஆண் சடலம் கிடப்பதாக ஊதியூா் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், அவா் தெய்வசிகாமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

About The Author